உனக்காக கோர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையும்
முலாம் பூசப்படாதவை என
நீ உணரும் நாட்களில்,
உதிரத்தொடங்கியிருக்கும்
சருகாகி..
திணிக்கும் கசப்பை
நீ விரும்பியவண்ணமே
ஏற்கிறேன்
பிறிதொரு நாளில்
எதன் சுவையையும்
சுழித்து உமிழ்ந்திடாமலிருக்க...
வண்ணத் துகிலொன்றின்
நிறம் மங்கி
கருமை போர்த்துகிறது..
எல்லாவற்றையும்
ஏற்கத்துணிந்த பின்னும்
எட்டி நகரும்
வழி தெரியாது
விட்டு சென்ற இடத்திலேயே
காத்திருக்கிறேன்..!!