காலம் கொஞ்சமாய்
பரிசளிக்கிறது
விருப்பு வெறுப்பற்ற
சூழலை
தனித்து பயணிப்பதின்
இறுக்கம் தளர்த்த
நினைவோடு
போராடும்
மனதிற்கு,
உள் உணர்வே
பதிலாய் மாறிப்போகும்
விந்தை தான் என்ன..
என் மெளனங்கள்
எல்லாம் உன்னோடு
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்பதை நீ
உணர்வாயா...??
நீயற்ற பாதைகளில்
தனித்து நடக்கையில்
சூழ்ந்து கொள்ளும்
இருள், ஏன்
உன் வாசத்தை
பரப்புகிறது..??
இதற்கு மேலும்
நம் இடைவெளிகளில்
நிறைந்திருப்பது
ப்ரியங்கள் தானே அன்றி
பிறிதொன்றுமில்லையென
அறிவோம்..
பரிசளிக்கிறது
விருப்பு வெறுப்பற்ற
சூழலை
தனித்து பயணிப்பதின்
இறுக்கம் தளர்த்த
நினைவோடு
போராடும்
மனதிற்கு,
உள் உணர்வே
பதிலாய் மாறிப்போகும்
விந்தை தான் என்ன..
என் மெளனங்கள்
எல்லாம் உன்னோடு
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்பதை நீ
உணர்வாயா...??
நீயற்ற பாதைகளில்
தனித்து நடக்கையில்
சூழ்ந்து கொள்ளும்
இருள், ஏன்
உன் வாசத்தை
பரப்புகிறது..??
இதற்கு மேலும்
நம் இடைவெளிகளில்
நிறைந்திருப்பது
ப்ரியங்கள் தானே அன்றி
பிறிதொன்றுமில்லையென
அறிவோம்..

No comments:
Post a Comment