எதிர்பாரா நட்பு
சூழலும் சந்தர்ப்பமும்
விதைத்த செடியில்
மொட்டுவிட துவங்கியது…
எளிமை கண்டு வியக்க
எளிதாய் உரு கொண்டு
பூத்தது..
ஒருவருக்குள் ஒருவரானோம்
அது அழைத்து சென்றது
வட்ட பாதையில்
உன் பின் நானும்
என் பின் நீயும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைத்தது நம்மையே
என்றான பின்னும்..!!
No comments:
Post a Comment