அன்றொரு நாள்
இதே தினத்தில்
நான் இருந்தேன்
அவனருகில்..
வெம்மை கூட்டும்
கோடையும் கூட
இதமாய் வருடியது
விரலிடுக்குகளில்
கண் சிமிட்டிக்
கொண்டது
வெட்கம் பூத்த
வார்த்தைகள்..
தொடக்கமும்
முடிவுமறியாது
உருண்டோடத்
துவங்கியது
ஒரு பயணம்
மனதினுள்...
விட்டுவிட
இயலாது
அத்தனையையும்
சேகரிக்கிறது
நினைவுகளாய்
காலம்..
அன்றொரு நாள்
இதே தினத்தில்
அவன் இருந்தான்
என்னருகில்...!!
இதே தினத்தில்
நான் இருந்தேன்
அவனருகில்..
வெம்மை கூட்டும்
கோடையும் கூட
இதமாய் வருடியது
விரலிடுக்குகளில்
கண் சிமிட்டிக்
கொண்டது
வெட்கம் பூத்த
வார்த்தைகள்..
தொடக்கமும்
முடிவுமறியாது
உருண்டோடத்
துவங்கியது
ஒரு பயணம்
மனதினுள்...
விட்டுவிட
இயலாது
அத்தனையையும்
சேகரிக்கிறது
நினைவுகளாய்
காலம்..
அன்றொரு நாள்
இதே தினத்தில்
அவன் இருந்தான்
என்னருகில்...!!

No comments:
Post a Comment