ஒரு தற்கொலைக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அவர்களின் அப்போதைய மனநிலையை யாரும் உணராதவரை ஆயிரமாயிரம் அறிவுரைகளை யார் வேண்டுமானாலும் வழங்கிச்செல்லலாம். அந்த அறிவரைகள் வெளிப்படும் கணம் மட்டுமே அவர்களை நினைவிலிருத்தி,இவர்களால் சொல்லக்கூடும். அதற்காக தற்கொலைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை. எப்போதும் எதற்கும் தற்கொலை தீர்வாகாது.
ஒரு தற்கொலை செய்தியை கேட்ட மாத்திரத்தில் இது வரை தற்கொலை செய்து கொண்டோரின் பட்டியல் மனதிற்குள் ஓடத்தொடங்கிவிடும். ஆனால் அவர்கள் வாழ்வின் ஆகச்சிறந்த பாடங்களை ஏதேனும் ஒரு கணத்தில் நம்முள் புகட்டியிருப்பார்கள். அதனை நமது ஊன்றுகோளாய் பிடித்துக்கொண்டு முன்னேறி செல்லும் நொடியில், அவர்களின் இழப்பு என்பது ஈடுசெய்ய இயலாததாகிவிடுகிறது. மேலும் தங்களின் தற்கொலையினாலும் வாழ்க்கை புகட்ட முடியாத அத்தனை பாடங்களை புகட்டி விடுகின்றனர்.
பொதுவாகவே சினிமாவை சினிமாவாக மட்டுமே ஏற்றுகடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் பார்த்த படம் MS DHONI.முழுமையாக தோனியாகவே பார்க்கத்தொடங்கியிருந்தேன் சுஷாந்த்தை. அந்த படத்திற்கு பிறகு தான் தோனி பிடிக்கவும் ஆரம்பித்தது எனவும் சொல்லலாம். தோனியின் விடாமுயற்சியில் வெற்றி பெற்றதை கூறும் கதை. எத்தணை இழப்புகள் வந்தாலும் எதிர்த்து போராடி வென்ற உண்மை கதையை அப்படியே உள்வாங்கி தனது நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார்.
வெறும் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி விட்டார் போலும். நானும் மகனும்(விஷாலும்) இந்த படத்தை எப்போது பார்த்தாலும் பேசிக்கொள்ளும் ஒரு வாசகம் "Hard work never fails" உன் லட்சியத்தை நோக்கி உயிர்ப்போடு இரு ன்னு சொல்லிட்டே இருப்பேன். "உயிரோடு இரு" ன்னு இனி சொல்லியும் வளர்க்கணும் போல,
இந்த கொரோனா காலத்தில், காசு,பணம், பதவி, படிப்பு இது எதுவும் இல்லையென்றாலும் உயிரோடிருப்பதுவே மிகப்பெரிய வெற்றி நம் வாழ்வில்.
#நல்லா_இருங்க

No comments:
Post a Comment