Saturday, August 29, 2020

மெளனச் சிதறல்

 மெளனத்தில்,

விரும்பி தேர்ந்தெடுத்த

ஒவ்வொரு சொற்களையும் 

இட்டுத்தான்

நிரம்பிக்கொண்டிருக்கிறேன்...


தழும்பி வெளிவரும்

சொற்கள்

உன் ப்ரியத்தின்

வாசம்தனை

சுமந்து

கரை தழுவட்டும்.,

இல்லையேல்,


பட்டுத்தெறிக்கும்

சொற்களின்

அழுத்தம் தாளாது

பேரன்பின் பிரவாகமாக

கொட்டித்தீர்த்துவிடு,!!


எனக்கான  

சொற்களென்பது

உனதானது மட்டும் தானே..!!

No comments:

Post a Comment