மெளனத்தில்,
விரும்பி தேர்ந்தெடுத்த
ஒவ்வொரு சொற்களையும்
இட்டுத்தான்
நிரம்பிக்கொண்டிருக்கிறேன்...
தழும்பி வெளிவரும்
சொற்கள்
உன் ப்ரியத்தின்
வாசம்தனை
சுமந்து
கரை தழுவட்டும்.,
இல்லையேல்,
பட்டுத்தெறிக்கும்
சொற்களின்
அழுத்தம் தாளாது
பேரன்பின் பிரவாகமாக
கொட்டித்தீர்த்துவிடு,!!
எனக்கான
சொற்களென்பது
உனதானது மட்டும் தானே..!!
No comments:
Post a Comment